அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் எஸ்பிபி அவர்களின் தற்போதைய நிலை தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கை.! உண்மை நிலை இது தானாம்..!!
அண்மையில் இந்திய சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய விடயங்களில் எஸ்பிபி அவர்களின் உடல்நலக் குறைவும் ஒன்றாககும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா எஸ்பிபி அவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டார். சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்பிபி அவர்களின் உடல் நிலை மோசமாக உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என அனைவரும் எஸ்பிபி அவர்கள் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து அவர் ஓரளவு குணமடைந்து வந்தார். கடந்த வாரம் எஸ்பிபி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டது, இதன் போது அவருக்கு கொரோனா இல்லை என மருத்துவ அறிக்கை வந்தது.
ஆனால் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரலில் ஏற்பட்டுள்ள சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் எஸ்பிபி ஆரம்பத்தில் பேச மயக்க நிலையில் இருந்தார். ஆனால் தற்போது 80% வீதம் குணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தற்போது 20 தொடக்கம் 30 நிமிடங்கள் எஸ்பிபி அவர்களால் எழுந்து அமர்ந்திருக்க முடிகிறது என்றும் அவர் உணவு உண்கிறார் என்றும் எஸ்பிபியின் மகன் சரண் தெரிவித்துள்ளார். சீக்கிரமே எஸ்பிபி அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று சரண் மேலும் தெரிவித்துள்ளார்..!