மயக்க நிலையில் இருந்து மீண்ட பாடகர் பாலசுப்பிரமணியம்..! அவரது தற்போதைய நிலை..!!
நேற்றைக்கு முன் தினம் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாக வைத்திசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நுரையீரலில் ஏற்பட்ட திடீர் பிரச்சனை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது,
சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நேற்றைக்கு முன் தினம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடல் நிலை மிகவும் மோசமானது, காப்பாற்றுவது மிகவும் கடினம் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியம் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார். சிலர் பாலசுப்பிரமணியம் இறந்துவிட்டதாக வதந்திகளும் பரவியது, இதற்கு எஸ்பிபியின் மகன் சரண் தந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இது வரை பாலசுப்பிரமணியம், அவர்கள் மயக்க நிலையில் இருந்ததாகவும் தற்போது நினைவு திரும்பியுள்ளதாகவும், இனி பூரண குணமடைந்துவிடுவார் என தெரிவித்துள்ளனர்..!!