வயிற்றில் கேஸ் நிரம்பி வாயு தொல்லையால் அவஸ்தை படுகின்றீர்களா.? அடிக்கடி செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றதா.? இதோ அனைத்திற்கும் ஒரே தீர்வு..!!
பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வாயு பிரச்சனை, வயிற்றில் கேஸ் நிறைவதால் அடிக்கடி இந்த வாயு தொல்லை ஏற்பட்டு விடுகிறது. சிலருக்கு செரிமான பிரச்சனைகள், சிலருக்கு மலச்சிக்கல் என ஒன்று இல்லாவிட்டால் ஒன்று வந்து விடுகிறது.
இன்று நாம் பார்க்கப் போவது இவை மூன்றையும் குணப் படுத்தும் ஒரே மருத்துவத்தை பார்க்கப் போகின்றோம். இதற்கு தேவையான பொருட்கள்: ஒரு கப் மோர், அரை டீஸ்பூன் ஓமப்பொடி, ஒரு பிஞ்ச் பெருங்காயப் போடி, இந்து உப்பு சிறிதளவு ( இருக்கும் உப்பை பயன்படுத்தலாம்) செய்யும் முறையை பார்க்கலாம்:
மோர் கப்பில் ஓமம் மற்றும் இரண்டு விரல்களால் பிடித்து எடுக்கும் அளவு பெருங்காயத் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். இதனுடன் சுவைகேற்ப இந்து உப்பு சேர்த்து குடியுங்கள். இதனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் குடிக்கலாம்.
உணவு எடுத்துக் கொள்ள முன் பின் என்று கிடையாது, இதனை குடித்து வருவதால் வயிற்றில் நிரம்பி உள்ள கேஸ் பிரச்சனை தீர்வதுடன் வயிற்றுப் புண், மற்றும் செரிமான பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அத்துடன் மலச்சிக்கல் நீங்கி இலகுவாக இருக்கும். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள்..!!