சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த பிரபலம் தான் இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்றால் நம்புவீர்களா.? இதை பாருங்கள் புரியும்.!!
பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்களை பார்த்து அவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனாலோ என்னவோ கடந்த சில நாட்களாக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வியப்புக்குள்ளாகி வருகிறது.
இன்று நாம் பகிர்ந்திருக்கும் இந்த புகைப்படம் அத்தனை எளிதில் நாம் மறக்க கூடிய நபருடையது இல்லை, அவர் எங்களை விட்டு திடீரென மறைந்துவிட்ட போதும் அவர் எமக்காக் விட்டுச் சென்ற பாடல்கள் அவரை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்.
இப்போ உங்களுக்கு யார் என்று புரிந்திருக்கும். அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தான். சிறு வயதில் இசை மீதான ஆர்வம் இருந்ததால் சிறு வயது முதல் மேடைகளில் பாட ஆரம்பித்து சுமார் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தார்.
முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளாத எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு தேவி சரஸ்வதி அளித்த வரம் தான் இசை என்று கூறலாம். எங்களை விட்டு பிரிந்தாலும் நினைவுகளில் வாழும் பாலசுப்பிரமணியம் அவர்களின் சிறு வயது புகைப்படம் தான் இது.!!