நடிகை ஸ்ரீதேவியின் வீட்டிற்குள் கொரோனா வைரஸ் நுழைந்தது எப்படி.!? ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி பேட்டி..!!
70 , 80 களில் மட்டும் இன்றி கடந்த வருடத்திற்கு முன்பு வரை தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 2018ம் ஆண்டு உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக துபாய் சென்றிருந்த போது திடீர் மரணமடைந்தார். இவரது மரணம் இன்று வரை மர்மமாக உள்ள நிலையில் இவரது மகள் ஜான்வி தற்போது தாயின் இடத்தை நிரப்பி குடும்பத்தினரை கவனித்து வருகிறார்.
தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி சினிமாவில் நடித்து வருகிறார். அண்மையில் ஸ்ரீதேவியின் வீட்டில் பணி புரியும் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து நடத்தப் பட்ட பரிசோதனையில் வீட்டில் பணி புரியும் மூவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப் பட்டது.
வீட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லாத போதும் சுய தனிமைப் படுத்தலில் குடும்பமே உள்ளது. கொரோனா வைரஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படி தொற்றியது என்ற கேள்விக்கு ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி பதில் அளிக்கையில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டதில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. பணியாளர்கள் சென்றாலும் குளித்து பாதுக்காப்பான முறையிலேயே இருந்தோம்.
ஆனால் எப்படி தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. என் குடும்பத்தினரை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இருப்பதால் மிகவும் கவனமாக இருக்கிறேன். அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தும் எப்படி கொரானா தொற்று ஏற்பட்டது என்று தெரியவில்லை. என தெரிவித்துள்ளார். அத்துடன் பணியாளர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்..!!