கட்டிய காதல் கணவனை விட்டு கொடுக்குமாறு கெஞ்சிய மனைவி.!! தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள பெரும் பரபரப்பு!
இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற நபர் மினி பஸ் கண்ட்ரக்டராக பணியாற்றி வந்தார். இவர் சுகந்தி என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 19 மற்றும் 17 வயதில் இரு மகள்கள் உள்ளனர். மேலும் இந்த நிலையில், பேருந்தில் தினமும் பயணியாக வந்த மடிச்சல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும், ரஞ்சித்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவியுடம் ரஞ்சித் சொல்வது அனைத்தையும் அப்படியே நம்பியுள்ளார், இந்த மாணவி ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த ஏழ்மையையே பயன்படுத்தி கொண்ட ரஞ்சித், தனியாக ஒரு வீட்டை எடுத்து அங்கு பெண்ணை அழைத்து கொண்டு போய் குடும்பம் நடத்தி வந்தார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த தகவல் முதல் மனைவி சுகந்திக்கும் அவர் மகள்களுக்கும் தெரியவர, அதிர்ச்சியடைந்து உடனடியாக இது தொடர்பாக புகார் கொடுத்தனர். அதன் பின்னர் கணவன் குடும்பம் நடத்தி வரும் அந்த மாணவியின் வீட்டு வாசலுக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த மாணவியோ, நான் ரஞ்சித்தை விட்டு தர முடியாது என்று கூற, மனைவியோ என் கணவரை விட்டு விடு என்று கெஞ்சியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.