ஸ்ரீதேவி மரணம் எப்படி நடந்தது.? உண்மையை சொன்ன கணவர் போனி கபூர்..!!
கடந்த வருடம் துபாயில் குளியலறை தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் நடிகை ஸ்ரீதேவி. அதிக போதையில் இருந்ததால் ஸ்ரீதேவி தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா கொண்டுவரப் பட்ட ஸ்ரீதேவியின் உடல் அடக்கம் செய்யப் பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களாக முன்னாள் கேரளா காவல்துறை அதிகாரி ஸ்ரீதேவி கொலை செய்யப் பட்டுள்ளதாகவும் எப்படி கொலை செய்யப் பட்டிருப்பார் என்பதையும் கட்டுரையாக வெளியிட்டிருந்தார். இதனை எமது இணையத்திலும் வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து முதல் முதல் பேசியுள்ளார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். ஸ்ரீதேவியை இழந்து அவரது மகள்கள் தவிகின்றனர் .
வாழ்க்கைத் துணையை இழந்து நான் தவிக்கிறேன் இந்த நிலையில் இயற்கையாக மரணமடைந்த ஸ்ரீதேவி பற்றி ஆதாரமற்ற செய்திகளை நீதியை அறிந்தவர்கள் வெளியிட்டு வருவது கண்டிக்க தக்க விடயமாகும். ஏதேனும் ஆதாரம் இருந்தால் சட்ட ரீதியாக எங்களுக்கும் உதவலாம் ஆனால் இவர்கள் மரணமடைந்த ஸ்ரீதேவியை மீண்டும் மீண்டும் கொலை செய்கிறார்கள்.
ஸ்ரீதேவியின் மரணம் கொலை அல்ல என நிரூபிக்க பட்டாகிவிட்டது அதனால் இறந்தவரை தொடர்ந்து கொலை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் இதனை சாட்டாக வைத்து போனி கபூர் தயாரித்துள்ள ” நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தை நிறுவனங்கள்
ஆகக் குறைந்த விலையில் கேட்கின்றதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 1.1/2 வருடம் கடந்த பின் ஸ்ரீதேவி கொலை செய்யப் பட்டார் என புரளியை கிளப்பி திரைப்படத்தை வீழ்த்தவே இந்த திட்டம் என போனி கபூர் தெரிவித்துள்ளார்..!!