நடிகை ஸ்ரீபிரியா வாழ்வில் நடந்த சோகம்..!! அந்த நடிகர் கட்டிப் பிடித்தது எப்படி இருந்தது”?என கேட்டு தொல்லை கொடுத்தார்களாம்..!!
சினிமா நடிகைகள் என்றால் நாம் பார்க்கும் பார்வை சற்று மாறிவிடும். அவர்கள் நடிகைகள் பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்கள்…இப்படி நாம் சாதாரணமாக பேசி கடந்து செல்வோம்..ஆனால் அவர்களுக்குள் இருக்கும் வலிகள் பற்றி எப்போதும் நாம் தேடிப் பார்ப்பதில்லை… இதற்கான ஒரே காரணம் அவர்கள் நடிகைகள் அவ்வளவு தான். இந்த விடயம் பற்றி அண்மையில் நடிகை ஸ்ரீபிரியா பேட்டி அளித்துள்ளார்.
அதில் தான் பட்டு வந்த கஷ்டங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார். தனது வாழ்க்கை பற்றி கூறுகையில்… சினிமாவிற்கு வருவதற்கு முன்பு என் வாழ்க்கை ஓரளவு நன்றாக தான் இருந்தது.. ஆனால் முதல் திரைப்படம் ரிலீஸ் ஆனதுமே தலைவலி ஆரம்பமானது. வெளியே எங்கும் செல்ல முடியாது என்பதை விட அந்த நடிகரை கட்டிப் பிடித்த போது எப்படி இருந்தது..
இந்த நடிகருக்கு முத்தமிட்ட போது எப்படி இருந்தது என ரசிகர்கள் கொச்சையாக பேசியது இன்றளவும் நினைவில் இருக்கிறது. இதனால் பல இரவுகள் உறக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறேன். இது நடிப்பு என எடுத்து கூறுவதற்கு முடிவதில்லை. கேட்பதற்கும் யாரும் இல்லை. இன்றைய சினிமா போல் அன்று இருக்கவில்லை அடக்க ஒடுக்கத்திற்கே முதலிடம் கொடுக்கப் பட்டது..
ஆரம்பத்தில் என் கண் வாயை கிண்டலடித்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் என் உடல் எடை அதிகரித்ததையும் கிண்டலாக்கினார்கள். உரல் போல் இருக்கிறேன் என்றார்கள்.. தெரியாதவர்களை விட தெரிந்தவர்கள் கூட கலாய்க்கிறோம் என்ற பெயரில் எம் மனதை நோகடிப்பார்கள். இன்று கூட என்னை பற்றி தவறான மீம்ஸ் பார்த்தால் அழுது விடுகிறேன்.
அன்று பெரிதாக தொட்டு நடிக்காவிட்டாலும் சில திரைப்படங்களில் கட்டாயமாக நடிக்க வேண்டி இருக்கும்… அதனால் தகாத பெண்ணாகவே சித்தரித்தார்கள். இப்போது நினைக்கவும் கண்ணீர் வருகிறது.. ரசிகர்களே தயவு செய்து உங்கள் உறவுகளாக இருந்தால் கூட அடுத்தவர் முன்னிலையில் கலாய்க்கிறோம் என்கிற பெயரில்.. உடல் அமைப்புகளை வைத்து கிண்டல் செய்யாதீர்கள்.. வெளியே சிரித்தாலும் நிச்சயம் மனதளவில் வேதனை படுவார்கள் என தெரிவித்துள்ளார்..!!