அப்பாவின் காதல் லீலைகள் பற்றி வெளிப்படையாக பேசிய ஸ்ருதிஹாசன்.! என்ன தான் உலக நாயகன் என்றாலும் இது கேவலம் தான்..!!
உலக நாயகன் என மக்களால் போற்றப்படும் கமலஹாசன் அண்மைகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அரசியல் சர்ச்சைகள் ஒரு பக்கமும் குடும்ப பிரச்சனைகள் மறுபக்கமும் என உலக நாயகன் அடிக்கடி ஊடகங்களில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் கமலஹாசனின் பிறந்த நாள் அன்று குடும்ப புகைப்படத்தில் பூஜா குமார் இருந்தது வைரலானது.
இது தொடர்பாக குடும்பத்தினர் தங்கள் கருத்துகளை கூறிவரும் நிலையில் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். என் அம்மாவும் அப்பாவும் பிரிந்தது தொடர்பாகவும் அப்பாவின் புது வாழ்க்கை பற்றியும் பல செய்திகள் வைரலாகி வருகிறது. என் அம்மாவை அப்பா ஏமாற்றியதாக பலர் கூறுகின்றனர்.
ஆனால் என் அம்மாவை அப்பாவோ அப்பாவை அம்மாவோ ஏமாற்றவில்லை. அப்பவும் அம்மாவும் பிரிந்து இருந்த போது நானும் தங்கையும் அவர்களை சேர்த்து வைக்கவே முயற்சி செய்தோம் ஆனால் அப்பா அம்மா இருவரும் வீட்டில் இருந்தால் ஒரு நிமிடம் கூட யாரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர், பேசாமல் இருந்தனர், அழுதனர், இதனை பார்த்த போது சேர்ந்து வாழ்ந்தாலும் வலி பிரிந்தாலும் வலி என்ற நிலை தான். இதனால் இருவரும் பிரிந்தது பற்றி பெரிதாக நாம் கண்டுகொள்ளவில்லை.அம்மாவிற்கு அப்பாவின் பிரிவு நிம்மதி கொடுத்தது.
இருவரும் இப்போதும் பேசிக்கொள்கின்றனர். அப்பா அம்மா இருவரும் எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. இப்படி இருக்கும் போது அப்பாவை தவறாக பேசுவது ஏன் என்று தெரியவில்லை, அவர் யாருக்கும் துரோகி இல்லை, ஏமாற்றவும் இல்லை பிறக்கேன் அவரது தனிப்பட்ட விடயத்தில் தலையிடுகின்றார்கள் என ஸ்ருதி ஹாசன் பேட்டியளித்துள்ளார்..!!