இம்முறை நாமினேஷனில் வந்த 5 பேரில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் இவர் தானாம்.! கசிந்த தகவல்..!!
பிக் பாஸ் சீசன் 4ல் கடந்த வாரம் நடிகை ரேகா வெளியேறினார். இது போட்டியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது, ரேகா வெளியே சென்றதும் வீட்டில் இருக்கும் ஷிவானி மற்றும் பாலாஜிக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன் இருவரையும் மிஸ் செய்வதாக கூறினார்.
ரேகாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் நடந்தது. சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் டாஸ்க் வென்றதால் இம்முறை நாமினேட் செய்ய முடியாது. ரியோ தலைவராக இருப்பதால் அவரையும் யாரும் நாமினேட் செய்ய முடியாது.
அதே நேரம் சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி, அனிதா, ஆஜித், ஆரி ஆகியோர் இம்முறை நாமினேட் செய்யப் பட்டுள்ளனர்..இதில் சுரேஷை ரசிகர்கள் வெளியே அனுப்ப மாட்டார்கள், அதே போல் ஆரியும், பாலாஜியும் காப்பாற்றப் படுவார்கள்.
குறைவான வாக்குகள் பெறுவது கண்டிப்பாக ஆஜித்தாக இருக்கலாம்.. ஆனால் ஆஜித்திடம் எவிக்சன் ப்றீ பாஸ் இருக்கிறது அதனால் கண்டிப்பாக வெளியேற மாட்டார். மீதமிருப்பது அனிதா மட்டுமே, அதனால் இம்முறை அனிதா சம்பத் வெளியேற்றப் படலாம் என கூறப்படுகின்றது, பொறுத்திருந்து பார்க்கலாம்..!