சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளரை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டார்களா? பென்னி தாயாள் போட்ட பதிவுக்கு நபர் ஒருவர் போட்ட கொமெண்ட் ! பென்னியின் அதிரடி பதில்.!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏற்கனவே வெற்றியாளரை தேர்வு செய்து விட்டீர்கள் தானே என நபர் ஒருவர் கேட்டதற்கு பென்னி தயாள் அளித்த பதில் வைரலாகி வருகின்றது. கடந்த வாரத்திற்கு முதல் வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீதர் சேனா வெளியேற்றப் பட்டார்.
இவரது வெளியேற்றத்திற்கு காரணம் பென்னி தயாளின் தவறான முடிவு தான் காரணம் என பலரும் பென்னிக்கு திட்டி தீர்த்து வந்தனர். குறிப்பாக ஸ்ரீதர் சேனாவின் ரசிகர்கள் பென்னி தயாளை மிக மோசமாக விமர்சித்தார்கள் . இதனால் அடுத்த சீசனுக்கு நடுவராக வர மாட்டேன் என பென்னி தயாள் குறிப்பிட்டிருந்தார். இது கடந்து போய்விட்ட நிலையில் நேற்றைய தினம் அய்யனார் அவர்கள் வெளியேற்றப் பட்டார்.
போட்டி என்றால் கண்டிப்பாக வெளியேற்றங்கள் இருக்கும், தற்போது சூப்பர் சிங்கரில் பாடிக்கொண்டிருக்கும் அனைவருமே திறமையானவர்கள். அதனால் தேர்வு செய்வதில் நடுவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.இப்படி இருக்கையில் ஓணம் பண்டிகை அன்று பென்னி தயாள் ஓணம் வாழ்த்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இதில் வந்து கொமெண்ட் செய்த நபர் ஒருவர் சூப்பர் சிங்கரில் யாரை வெளியேற்ற வேண்டுமென்பதை ஏற்கனவே நீங்கள் முடிவு செய்து விடுகின்றீர்கள், பின்னர் வெளியே அனுபுகின்றீர்கள். அதே போல் வெற்றியாளரையும் இப்போதே தேர்வு செய்து இருப்பீர்களே, யார் என்று சொல்லு விடுங்கள் என கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பென்னி தயாள் இது ஓணம் வாழ்த்து இதில் வாழ்த்தை மட்டும் தெரிவியுங்கள், ஹாப்பி ஓணம் என குறிப்பிட்டுள்ளார்.!!