இன்றைய ராசி பலன் – 24.08.2021
இன்றைய பஞ்சாங்கம், 24-08-2021, ஆவணி 08, செவ்வாய்க்கிழமை, துதியை திதி மாலை 04.05 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 07.47 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 07.47 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும்.
ரிஷப ராசி அன்பர்களே:சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டில் குடும்பத்தினருடன் தெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நண்பர்கள் வகையில் திடீர் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.
மிதுன ராசி காரர்களே:பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும்.பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.
கடக ராசி நேயர்களே:ராசிக்கு பகல் 01.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே: ராசிக்கு பகல் 01.38 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.அவசியம் ஏற்பட்டால் தவிர, வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது.
கன்னி ராசி காரர்களே:நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.தாயாரின் உடல் நிலை சீராகும். உங்கள் முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
துலாராசி உறவுகளே:குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைக்காக பாடுபட வேண்டி இருக்கும்.தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். பெரியவர்களின் நன்மதிப்பை பெற பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறி யாகும். பயணங்களால் பயனடைவீர்கள்.முக்கிய முடிவுகள் எடுக்க நேரிட்டால் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு எடுக்கவும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் மூலம் லாபமடைவீர்கள்.சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.
மகர ராசி காரர்களே:இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும்.பொறுமையாக இருப்பது அவசியம்.
கும்ப ராசி உறவுகளே: கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். தாய்வழி உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருவதாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மீன ராசி நேயர்களே:
வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். பணியாளர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.