சன் டிவியில் ரோஜா சீரியலில் கலக்கி வரும் பிரியங்காவின் காதலன் இவர்…! அழகிய ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படம்..!!
தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் ஹன்சிகாவிற்கு தோழியாக நடித்தவர் ரோஜா என்கிற பிரியங்கா. தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சதிரமாக அறிமுகனான இவர் பல திரைப்படங்களில் நடித்து தள்ளினார். அதன் பின் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்களை கவர்ந்தார். இதன் போது இவருக்கு தெலுங்கு சீரியல்களில் வாய்ப்பு கிடைக்க அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் தான் இவருக்கு தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் வேறு திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் மறுபடி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சன் டிவியின் ரோஜா சீரியல்.
இந்த சீரியல் தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் பிரியங்கா பற்றிய சில வதந்திகள் வெளியாகி உள்ளது. அதற்கு உடனடியாக பதில் அளித்துள்ள பிரியங்கா என் திருமணம் நின்று விட்டதாகவும் என் காதலர் என்னைவிட்டு சென்று விட்டதாகவும் சிலர் கிழப்பியுள்ளனர்.
ஆனால் என் திருமணம் தடைப்படவில்லை. எனக்கும் எனது நீண்ட நாள் காதலரான ராகுலுக்கும் கடந்த வருடம் மே மாதம் நிச்சயதார்த்தம் இடம் பெற்றது. இருவரும் ஒரே துறையை சார்ந்தவர்கள் என்பதால் ஒருவருக்கு ஒருவர் நேரம் ஒதுக்க முடியாமல் போனது. இதனால் ராகுல் தன் வேலையை விட்டு விட்டார்.
எனக்காக மலேசியா சென்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நாம் இருவரும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.இந்த வருட இறுதியில் எங்கள் திருமணம் இடம்பெறும், இந்த விடயத்தில் இருவரும் ஒரே முடிவாக இருக்கிறோம். வீணான புரளிகளை நம்ப வேண்டாம், எங்கள் காதல் எப்போதும் பிரியாது என தெரிவித்துள்ளார்..!!