சுற்றுலாவிற்காக சியாச்சின் பனிமலைப்பகுதி திறப்பு..!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலையில் மீதுள்ள சியாச்சின் பனிமலை சிகரம் உலகின் உயரமான போர்க்களம் என்ற பெருமை பெற்று விளங்குகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட கார்கில் போருக்கு சியாச்சின் மலைப் பிரதேசத்தில் உள்ள நிலம் தொடர்பான உரிமை யாருக்கு என்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலையின் மீதுள்ள சியாச்சின் பனிமலை சிகரம் உலகின் உயரமான போர்க்களம் என்ற பெருமை பெற்று விளங்குகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் ஏற்பட்ட கார்கில் போருக்கு சியாச்சின் மலைப் பிரதேசத்தில் உள்ள நிலம் தொடர்பான உரிமை யாருக்கு என்பதே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு இடையில் சியாச்சின் பிரதேசம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். லடாக்கின் Shyok ஆற்றின் குறுக்கே உருவாக்கப்பட்டுள்ள Colonel Chewang Rinchen பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் தலைமை இராணுவ தளபதி பிபின் இராவத்துடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கலந்துகொண்டார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
சுற்றுலாதுறையில் மிகப்பெரிய ஆற்றலை லடாக் பெற்றிருக்கிறது, நல்ல சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் போது பெரிய அளவிலான சுற்றுலா பயணிகளை லடாக் பெறும்.
சுற்றுலாவிற்காக சியாச்சின் பிரதேசம் திறக்கப்படுகிறது. சியாச்சினில் உள்ள அடிவார முகாமில் தொடங்கி குமார் போஸ்ட் பகுதி வரையில் உள்ள ஒட்டுமொத்த பகுதிகளும் சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட அனுமதி கொடுத்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளது.
உலகின் உயரமான போர்க்களம் என்ற சிறப்பை பெற்றுள்ள சியாச்சினின் காலநிலை மிகவும் சவாலாக உள்ள ஒரு இடமாகும்.
Ladakh has tremendous potential in Tourism. Better connectivity in Ladakh would certainly bring tourists in large numbers.
The Siachen area is now open for tourists and Tourism. From Siachen Base Camp to Kumar Post, the entire area has been opened for Tourism purposes.
— Rajnath Singh (@rajnathsingh) 21 October 2019