பிரபல சீரியல் நடிகர் திடீர் தற்கொலை..! அதிர்ச்சியில் திரையுலகம்..!!
கடந்த சில வருடங்களாக சினிமா துறை பல இழப்புகளை சந்தித்து வருகிறது. முன்னணி நடிக நடிகைகள் மரணிக்க ஆரம்பித்துள்ளனர். சிலர் மாரடைப்பாலும், சிலர் மர்மமாகவும் மரணித்து வருகின்ற நிலையில் சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என அனைத்து மொழி நடிக நடிகைகளும் தற்கொலை செய்துகொள்கின்றனர். சுசாந்த் சிங்கின் மரணம் திரையுலகை அதிர வைத்துள்ள நிலையில் தற்போது கன்னடா சினிமாவை சேர்ந்த சுசில் கவுடா திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
“அந்தபுர” என்ற சீரியலில் நடித்த சுசில் குறித்த சீரியலின் மூலம் பிரபலமானார். அதன் பின் பல சீரியல்களில் நடித்ததுடன் அடிக்கடி கிசுகிசுக்களிலும் மாட்டி வந்தார். இந்த நிலையில் 30 வயதில் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை..!!