உயிர் பிரியும் நிலையில் தவித்த நடிகை சுஷ்மிதா சென்..! இப்படி நடந்ததா.?
சுஷ்மிதா சென்..அட இந்த பெயரை எங்கோ கேட்டிருக்கிறோமே என கூறிவிடாதீர்கள் அட ஆமாங்க முதல் முதல் இந்தியாவில் இருந்து வந்த உலக அழகி இவர் தான். 1994ம் ஆண்டு இவர் இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர்.
அதன் பின் ஹிந்தி திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் ரட்சகன் திரைப்படத்தில் நாகர்ஜூனா ஜோடியாக நடித்தார். அதன் பின் முதல்வன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு வந்து சென்றார். 2015ம் ஆண்டு வரை நடித்த சுஷ்மிதா அதன் பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
இதற்கான காரணம் அவருக்கு ஏற்பட்ட நோயாக இருந்தது. திருமணமாகாமல் ரோமன் ஷால் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வரும் சுஷ்மிதா சென் இரண்டு சுட்டி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைகளுக்கு ரெனீ, அலீசா என பெயர் வைத்துள்ளார்.
தற்போது சுஷ்மிதா மருந்து மாத்திரைகளுடன் வாழ்ந்து வருகின்றார் காரணம் 2011 ம் ஆண்டு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட போது அட்ரீனல் சுரப்பியில் ஏற்பட்ட மாற்றங்கள் இவரை மரணம் வரை கொண்டு செல்லும் அபாயம் உள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளார்கள். இனி காப்பாற்றுவது கடினம் என்று வைத்தியர்கள் கை விட்டனர். சரி இறந்துவிட்டேன் என முடிவு எடுத்துவிட்டேன்.
ஆனால் வைத்தியர்கள் முயற்சி செய்யலாம் என மீண்டும் முயன்றார்கள். முயற்சி வெற்றி பெற்றது. நான் உயிர் தப்பிவிட்டேன். ஆனால் இன்றளவும் மூன்று வேளையும் மருந்து குடிக்கிறேன். இறந்து பிறந்தது போல் இருக்கிறது என்கிறார்.!