“பால் அழகி தமன்னா தனது சுயலாபத்திற்காக மக்களை கொடுமை படுத்துகிறார்” நடிகை தமன்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!!
சர்ச்சைக்கு இன்னொரு பெயர் என்றால் அது ஸ்ரீரெட்டி தான். ஒவ்வொரு முறையும் யாராவது ஒருவரை பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்திவிடுவார். பொதுவாக இதில் சிக்குவது நடிகர்கள், இயக்குனர்கள், தான்.ஆனால் இம்முறை நடிகை தமன்னா சிக்கியுள்ளார்.
ஸ்ரீரெட்டி திரைப்பட வாய்ப்புகளுக்காக தற்போது சென்னையில் வசித்து வருகிறார், இவரது வீட்டுக்கு அருகில் பிரபல நடிகையான தமன்னாவின் வெப் சீரிஸ் ஒன்றின் சூட்டிங் நடந்து வரும் நிலையில் இதனால் ஸ்ரீரெட்டி உட்பட அங்கு வசிக்கும் பலரும் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து வசதிகளும் இருக்கும் தமன்னா அப்பாவி மக்களை தனது சுய லாபத்திற்காக தொல்லை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்ரீரெட்டி மேலும் குறிப்பிட்டதுடன் இதற்கு முற்றிப் புள்ளி வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பால் அழகியாக இருக்கும் தமன்னா மக்களுக்கும் எனக்கும் தொல்லையானால் நானும் தொல்லையாக மாறுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!