பிரபல நடிகர் நாகார்ஜூனா வீட்டிற்குள் அழுகிய நிலையில் மீட்கப் பட்ட சடலம்..! அதிரடியாக களத்தில் இறங்கிய பொலீஸார்..!!
தமிழ் தெலுங்கு உட்பட ஏராளமான திரைப்படங்களில் கலக்கிய கலக்கி வரும் பிரபல நடிகரான நாகார்ஜூனாவின் வீட்டில் அழுகிய நிலையில் சடலத்தின் உடல் பாகங்கள் மீட்கப் பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் rangareddy மாவட்டம் papireddyguda பகுதியில் நாகார்ஜூனாவிற்கு சொந்தமான 40 ஏக்கர் விவசாய நிலத்தை துப்பரவு செய்ய சென்ற தொழிலாளர்களே இந்த சடலத்தை முதலில் பார்த்துள்ளதுடன் இது தொடர்பாக கிராம வருவாய் திணைக்கள அதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கிராம அலுவலர் பொலீஸாருக்கு கொடுத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் மோப்ப நாயின் உதவியுடன் முழு சடலத்தையும் கண்டு பிடித்துள்ளனர். சடலம் முற்றாக அழுகிய நிலையில் உடல் பாகங்கள் வெவ்வேறாக இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து இறந்தவர் யார் என்பதை அறிய காணாமல்போனவர்களின் விபரங்களை பொலீஸார் சேகரித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் நாகார்ஜூனா தெரிவிக்கையில்..இயற்கை விவசாயத்திற்காக அண்மையில் குறித்த இடத்தை வாங்கினேன்,
பண்ணை வீட்டுடன் கூடிய இடம் என்பதாலும் அவை நீண்ட நாட்கள் பராமரிப்பு இன்றி இருந்ததாலும் தொழிலாளர்களை அனுப்பி துப்பரவு செய்யச் கூறினேன், இந்த சடலம் பற்றி எதுவும் தெரியவில்லை பொலீஸார் விசாரணை மேட்கொண்டு வருகின்றனர் விசாரணை முடிவில் பார்க்கலாம் என கூறியுள்ளார்..!