டாஸ்கில் வெற்றி பெற்று பிக் பாஸ் குரலின் முகத்திரையை கிழிக்கும் லொஸ்லியா.? யார் அந்த பிக் பாஸ். !?
100 நாட்களை பிக் பாஸ் நெருங்கி விட்டது, இன்றைய நிகழ்ச்சியில் சாண்டி பைனல் சென்றுவிட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறப் போகிறார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. ஒரு சிலர் லொஸ்லியா என்றும் இன்னும் சிலர் செரின் என்றும் கூறி வருகின்ற நிலையில் நாளைய நிகழ்ச்சியின் பின் தான் உண்மை தெரிய வரும்.
இது இப்படி இருக்க இது வரை யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இன்று லொஸ்லியாவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நேற்றைய தினம் டாஸ்க் ஒன்று கொடுக்கப் பட்டது. அந்த டாஸ்கில் ஒவ்வொருவருக்கு ஒரு பந்து கொடுக்கப் பட்டது அந்த பந்தில் ஒவ்வொரு விடயம் எழுதப் பட்டிருந்தது.
அந்த பந்தை கண்களை கட்டிக் கொண்டு ஹோல் போட வேண்டும். இதில் முகென் தோற்றுவிட தர்சன், சாண்டி, செரின் லொஸ்லியா அனைவரும் வெற்றிபெற்றனர். இதில் லொஸ்லியாவின் பந்தில் எழுதப் பட்டிருந்த விடயம் பிக் பாஸுடன் ஒரு செல்பி.
இது வரை பிக் பாஸ் குரலை மட்டுமே அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க அந்த கம்பீர குரலுடன் புகைப்படம் என்பது யாராலும் எதிர்பார்த்திருக்க முடியாத விடயமாகும். இன்று லொஸ்லியா பிக் பாஸ் குரலின் முகத்திரையை கிழித்து புகைப்படம் எடுத்துக் கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர். பார்க்கலாம் யார் அந்த கம்பீர குரலுக்கு சொந்தகாரர் என்று…!!