108MP கேமராவுடன் புத்தம் புதிய ஸ்மார்ட் மொபைல் போனை அறிமுகம் செய்யவுள்ள சாம்சங் நிறுவனம்…!!!
உலகளாவிய ரீதியில் ஆப்பிள் நிறுவனத்திற்கு நிகராக சாம்சுங் நிறுவனம் விளங்குகின்றது. அனைத்து வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை விட Samsung கைப்பேசிகளை அதிகம் பாவனையாளர்களை கவர்ந்துள்ளது.
உலகத் தரம் வாய்ந்த Samsung ஸ்மார்ட் கைப்பேசிகளில் கேமராக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாம்சுங் நிறுவனம் 108 மெகாபிக்சல்களை கொண்ட பிரதான கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
அதையடுத்து எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள Galaxy S11 ஸ்மார்ட் கைப்பேசியிலேயே இக் கேமரா உருவாக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் சாம்சுங் நிறுவனம் Galaxy S தொடரிலான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருவது வழக்கமாகும்.
இந்த வருடமும் Samsung Galaxy S10 ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்திருந்தது. இந்த நிலையிலேயே அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள Samsung Galaxy S11 ஸ்மார்ட் கைப்பேசியில் இவ் அதிக வினைத்திறன் கொண்ட கேமரா தரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.