சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் குறித்து நாசா வெளியிட்ட தகவல்…!!!
இந்திய விண்வெளி ஆய்வு மையமான ஈஸ்ரோ கடந்த ஜுலை மாதம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் அனுப்பி வைத்துள்ளது.
இந்த முயற்சி 98 சதவீதம் வெற்றி அடைந்த போதிலும் இறுதியாக விக்ரம் லேண்டரை தரையிறங்குவதில் தோல்வியை கண்டுள்ளது. அதையடுத்து ஈஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரை சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரை கொண்டு தேடி வந்தனர்.
விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது என ஈஸ்ரோ அறிவித்துள்ள போதிலும் இதுவரைக்கும் அது தொடர்பாக எந்தவொரு புகைப்படங்களை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இந்திய விண்வெளி ஆய்வு மையமான ஈஸ்ரோவுடன் ஒன்றிணைந்து விக்ரம் லேண்டரை தேடும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி தமது Lunar Reconnaissance Orbiter (LRO) உதவியுடன் இத் தேடலை நாசா ஆரம்பித்துள்ளது.
விக்ரம் லேண்டர் தரையிறக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்ட பகுதியினை சூழ சுமார் 600 கிலோ மீற்றர்கள் வரையிலான புகைப்படங்களையும் எடுத்துள்ளது. இருப்பினும் தற்போது வரை விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.