மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!
ஒரு நாட்டின் மீது அனைத்து உலகத் தடைகளை விதிக்கப்படுவது தொடர்பில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது அறிவித்துள்ளார்.
உலக நாடுகள் ஈரானுடன் வர்த்தகம் செய்வதைத் தடுப்பதற்காக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக அவர் அமெரிக்காவை குற்றம் சுமத்தியுள்ளார். தடைகள் குறித்து அனைத்துலக அளவில் இன்னும் கூடுதல் கட்டுபாடு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
94 வயதுடைய மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது ஈரான் மீதான தடைகள் எந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை என கூறினார். இந்த சம்பவத்தால் பணக்கார நாடுகளும், வல்லரசுகளும் மட்டுமே அதனால் பலனடைவது போல் தெரிவதாக மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதோடு தடைகள் வேண்டும் என்றால் அவற்றை நிர்வகிக்கச் சட்டம் ஒன்று தேவை என்றும் கூறினார்.
ஒரு நாட்டிற்குத் தடை விதிக்கும் போது அது மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளால் மலேசியா பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளும் ஒரு பெரிய வர்த்தகச் சந்தையை இழந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிடடார்.