“தாடி பாலாஜி இன்னும் திருந்தவில்லை, குடித்துவிட்டு…”! நித்யா பாலாஜி பேட்டி..!!
தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக அறிமுகமாகி ஹீரோவின் நண்பராக காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த போது தொலைகாட்சி பக்கம் சென்றவர் விஜய் தொலைகாட்சியின் செல்லப் பிள்ளையானார். இங்கு ஈரோடு மகேஷுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தாடி பாலாஜி திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இவர் நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு போஷிகா என்ற குழந்தையும் உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நித்யா வேறு நபர் ஒருவருடன் காதலில் இருந்ததால் பாலாஜி அவரை அடித்த விடயம் வைரலான நிலையில் இருவரும் பிரிந்தனர்.
பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர். இருவரும் சேர்ந்து வாழுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் நித்யா வேறு நபருடன் ஊர் சுற்றும் புகைப்படங்கள் வெளியானது. இதனால் மறுபடி மோதல் ஏற்பட்டது. அதன் பின் பாலாஜி போஷிகாவின் செலவுகளை தான் பொறுப்பு எடுப்பதாக கூறியதுடன் முதல் கட்டமாக பணமும் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பாலாஜியின் மனைவி நித்யா அளித்துள்ள பேட்டியில் லாக் டவுண் காரணமாக நானும் குழந்தையும் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். பாலாஜி மாதம் மாதம் தருவதாக கூறிய பணத்தை தரவில்லை.
அத்துடன் பாலாஜி இன்னும் திருந்தவில்லை, குடித்துவிட்டு அழைப்பை ஏற்படுத்தி தவறாக பேசுகிறார். இதனால் இனி அவரின் பணத்தை எதிர்பார்க்க முடியாது. அதனால் நான் முதலில் பணி புரிந்த அலுவலகத்திற்கு பணிக்கு செல்லப் போகிறேன். வேலை தருவதாக மேலதிகாரி தெரிவித்துவிட்டார் என கூறியுள்ளார்..!!