அமெரிக்காவில் மீண்டும் பதட்டம்! மற்றுமொரு ஒரு கருப்பின இளைஞனை சுட்டுக் கொன்ற பொலிஸ்..!!
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் மற்றுமொரு ஒரு கருப்பின இளைஞன் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 27 வயதுடைய ராய்ஷார்டு புரூக்ஸ் என்ற இளைஞன் வெண்டி துரித உணவகம் முன்பு, பார்க்கிங் பகுதியில் காரில் அமர்ந்தவாரே தூங்கியுள்ளார். இதனால் பாதை தடைபட்டதாக அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த பொலிஸார், மது போதையில் இருந்த புரூக்சை கைது செய்ய முயன்றனர்.
அதற்கு உடன்பட மறுத்த குறித்த கறுப்பின இளைஞனை பொலிஸார் வைத்திருந்த டேசர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்ப முயன்ற நிலையில், பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்துள்ளார். அதன் பின்னர் குறித்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னரே ஜார்ஜ் பிளாய்டு படு கொலையால் வெடித்த போராட்டங்களே இன்னும் அடங்காத நிலையில், மற்றொரு கருப்பின இளைஞரும் கொல்லப்பட்டதால் அட்லாண்டாவில் போராட்டம் பூகம்பமாக வெடித்துள்ளது. இதன் இடையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அட்லாண்டா நகரின் பொலிஸ் தலைமை அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இளைஞரை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரியும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.