கிரிக்கெட் வீரர் “தல தோனி”யாக நடித்த முன்னணி இளம் நடிகர் சற்று முன்னர் தூக்கிட்டு தற்கொலை..! காரணம் இது தானாம்..!!
அண்மை காலமாக திரையுலகம் பல முன்னணி நடிக நடிகைகளை இழந்து வருகிறது. மாரடைப்பால் ஒரு பக்கமும் தற்கொலையால் இன்னொரு பக்கமும் என இந்த வருடத்தில் மட்டும் 10 க்கு மேட்பட்ட நடிக நடிகைகள் இறந்துவிட்ட நிலையில் இன்றைய தினம் யுவதிகளின் கனவு நாயகனான “சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
33 வயதான சுஷாந்த் சிங் ஹிந்தியில் “Kai Po Che” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்தியா கிரிக்கெட் உலகில் தல என கொண்டாடப் படும் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியாக அசத்தினார்.
அதன் பின் பல திரைப்படங்களில் நடித்ததுடன் ஏராளமான விருதுகளை அள்ளிய சுஷாந்த் தற்போதும் சில திரைப்படங்களை கை வசம் வைத்துள்ளார். லாக் டவுணில் வீட்டில் இருந்து வந்த சுஷாந்த் சிங் இன்றைய தினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் இவரது சடலம் மீட்கப் பட்டுள்ள நிலையில் இவரது தற்கொலைகான காரணம் மன அழுத்தம் என கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் இன்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விடயம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது..!