சிலியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறிய சுகாதார அமைச்சர் மாற்றம்!
சிலியில் உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் சரியான நடவடிக்கை மேற்கொள்ளாததை தொடர்ந்து அந்நாட்டு சுகாதார அமைச்சரை மாற்றம் செய்ய அந்நாட்டு அதிபர் செபஸ்டியன் பைனிரா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். புதிய சுகாதார அமைச்சராக ஆஸ்கர் என்ரிக் பாரீஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிலியில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பு மற்றும் பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.
அதை சரியான முறையில் கையாளத் தெரியவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தன. அதையடுத்து அதிபர் செபஸ்டியன் இதுவரை சுகாதார அமைச்சராக இருந்து வந்த ஜெய்மி மணாலிச்சை அப்பதவியிலிருந்து மாற்ற உத்தரவிட்டுள்ளார். சிலியில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3ஆயிரத்து 101 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு லட்சத்து 67ஆயிரத்து 355பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.