கட்டுமான பணியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த உயிரிழந்த புதுமாப்பிள்ளை!
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதுடைய லட்சுமணன் பூஜாரே என்பவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் ஒரு பெரிய கிணற்றை தோண்டும் கட்டுமான பணி நடைபெற்றது.
அதன் அருகில் லட்சுமணன் பூஜாரே நின்று கொண்டிருந்த போது திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அதையடுத்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த நபர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலும் இந்த சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் லட்சுமணனை வெளியில் தூக்கிய போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 38 வயதில் திருமணமான புதுமாப்பிள்ளை எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.