தர்சன் எதனால் வெளியேற்றப் பட்டார்.!? காரணம் யார்.!? இதோ உண்மையான முழு தகவல்…!!
பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் இவர் தான் என பலராலும் எதிர்பார்க்கப் பட்ட தர்சன் வெளியேறியது எப்படி.? யாரால் .? பலர் தர்சனின் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், சிலர் லொஸ்லியாவை திட்டி தீர்த்து வருகின்றனர். தர்சனின் வெளியேற்றத்திற்கு லொஸ்லியா என்ன செய்வார்.? தர்சனை வெளியேற்றியது விஜய் டிவி அல்ல தர்சனின் ரசிகர்கள் தான்.
இலங்கையில் இருந்து ஏராளமான கனவுகளுடன் கலந்து கொண்டவர் தர்சன். தர்சன் கலந்துகொண்ட நாளில் இருந்து போட்டியாளர்கள் மற்றும் கமலஹாசன் ஆகியோர் தர்சன் வெற்றிபெறுவார், தர்சனிடம் திறமை இருக்கிறது, உடலில் பலம் இருக்கிறது என கூறி, தர்சனின் மனதில் மட்டும் இன்றி வெளியே இருந்த ரசிகர்களின் மனதிலும் எப்படியும் தர்சன் தான் வெற்றியாளர் என்ற எண்ணத்தை உருவாக்கினார்கள்.
அதே போல் தர்சனும் தனது பலத்தை கொடுத்து பல டாஸ்குகளில் வெற்றிபெற்றார். தர்சன் நாமினேஷனில் வந்த போது ரசிகர்களின் எண்ணம் தர்சன் எப்படியும் அதிக வாக்குகள் பெற்று பைனல் செல்வார் என்பதே. தர்சன் இலங்கையில் இருந்து கலந்து கொண்டவர், தர்சனுடன் இலங்கையில் இருந்து லொஸ்லியாவும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இலங்கை தமிழர்களின் வாக்குகள் இரண்டாக பிரியும்.
அதே போல் புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளும் இரண்டாக பிரியும். இவர்கள் வெற்றிபெற வேண்டுமானால் தமிழ் நாட்டு மக்களின் வாக்குகள் நிச்சயமாக தேவைப் படும். இந்த நிலையில் தர்சனுக்கு தமிழ் நாட்டில் இருந்து வந்த வாக்குகள் இரண்டாக பிரிந்தது. இதற்கு காரணம் செரின். Aunty ஆக இருந்த செரினை அழகிய தேவதையாக தர்சன் மாற்றினார்.
தர்சனையும் செரினையும் காப்பாற்ற வேண்டும் என நினைத்த தர்சன் ரசிகர்கள் இருவருக்கும் தங்கள் வாக்கை பகிர்ந்தனர். ஆனால் செரினுக்கு கர்நாடகவிற்கு ஆதரவு கூறியதற்காகவே அங்கிருந்து வாக்குகள் வர ஆரம்பித்தது. கவின் வெளியேறியதும் கவினது வாக்கு லொஸ்லியாவிற்கு விழுந்தது.
சாண்டிக்கு ரசிகர்கள் ஏராளம். இதில் இவர்கள் அனைவருக்கும் வாக்குகள் விழ தர்சன் மட்டுமே யாரும் இல்லாதவரானார். தர்சனின் ரசிகர்கள் தர்சன் காப்பாற்றப் பட்டுவிடுவார், லொஸ்லியாவை பழி வாங்க வேண்டும் அதனால் செரினை காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்தில் தர்சனை கைவிட்டார்கள்.
முயல் போல் வந்த தர்சனை ஆமை போல் வந்த செரின் வெற்றி பெற்றார். இது ஒரு கேம் show, இதில் பலம், திறமை இருந்தால் போதாது, மக்களின் வாக்குகளும் வேண்டும். இலங்கை மற்றும் வெளிநாட்டு தமிழர்களின் வாக்குகளால் தர்சன் லொஸ்லியா இருவராலும் வெற்றிபெற முடியாது. தமிழ் நாட்டு தமிழர்களின் ஆதரவு நிச்சயம் வேண்டும்.
அது லொஸ்லியாவிற்கு கவின் மூலம் கிடைத்தது, தர்சனுக்கு செரின் மூலம் பறிக்கப் பட்டது. செரினுக்கு அவரது மாநில வாக்குகளும் உள்ளது என்பதை நாம் ஏற்கனவே பல முறை கூறினோம், ஆனால் அதனை தர்சன் ரசிகர்கள் கேட்கவில்லை இன்று தர்சனின் வெளியேற்றத்திற்கு முழுமையான காரணம் தர்சன் ரசிகர்கள் மட்டும் தான்..!!