பேஸ்புக் டுவிட்டர் என சமூக வலைத்தளங்கள் அதிகரித்த்பின் இளைஞர்கள் வீணாகிவிட்டார்கள் என பெற்றோர் திட்டி தீர்த்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் உள்ள நல்ல விடயங்களை மட்டும் பயன் படுத்தினால் நல்லதே நடக்கும் என்பதையும் அடிக்கடி நிரூபித்து வருகின்றனர்.
ஏற்கனவே மீடியா பவரை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காட்டினார்கள், அதன் பின் சின்ன சின்ன விடயங்களில் காட்டி வந்தாலும் பேஸ்புக் மூலம் அதிக கெட்ட விடயங்களே நடந்தது. இந்த நிலையில் மீடியா பவரை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்கள் நடிகர் அஜித் ரசிகர்கள். தைப் பொங்கலுக்கு வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் நடிகர் அஜித்தின் விஸ்வாசம்.
இந்த திரைப்படத்தை குடும்பங்களுடன் சென்று அனைத்து ரசிகர்களும் ரசித்து வந்தனர். இதில் இடம்பெற்ற
“கண்ணான கண்ணே கண்ணான கண்ணே”பாடல் ஒட்டுமொத்த தமிழர்களையும் கட்டிப் போட்டது. இந்த பாடலை இரண்டு கண்களையும் இழந்த இளைஞரான திருமூர்த்தி என்பவர் பாடி இருக்கிறார்.
இதனை வீடியோ எடுத்த அஜித் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட அதனை ஏராளமானவர்கள் பகிர இது இசையமைப்பாளர் இமானின் பார்வைக்கு செல்ல பாடலை கேட்ட இமான் கண் கலங்கியதுடன் தனது இசையில் திருமூர்த்தி கூடிய சீக்கிரத்தில் பாடுவார் என குறிப்பிட்டுள்ளார். எங்கோ ஒரு மூலையில் பாடிக்கொண்டிருந்த திருமூர்த்திக்கு சினிமாவில் இமான் வாய்ப்பு கொடுத்ததை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..!!