ஸ்வாமி நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமைகள்..!! வீடியோ வெளியிட்ட நித்தியானந்தாவின் நெருங்கிய சிஷ்யை..!! இதோ வீடியோ…!!
சுவாமி நித்தியானந்தா ஆசிரமங்களில் ஏகப்பட்ட குழப்பங்கள் அன்றாடம் வெளியாகி வருகின்ற போதும் சரியான தீர்வு இன்று வரை வெளியாகாத நிலையில் தற்போது இன்னுமொரு மிகப் பெரிய குற்றச் சாட்டு வைக்கப் பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை நித்தியானந்தா அவர்களின் நெருங்கிய சிஷ்யையாக இருந்த கனடாவை சேர்ந்த சாரா லேண்டரி என்பவர் வைத்துள்ளார்.
நித்தியானந்தாவை சந்திப்பதற்காக கர்நாடக சென்றிருந்த போது அங்கு வைத்து நித்தியானந்தா தன்னை மூளைச் சலவை செய்ததாக கூறியுள்ள சாரா கர்நாடகவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ருத்திரகன்னியாக துறவரம் பெற்றுள்ளார். அதன் பின் நித்தியானந்தாவின் பிரியமான சிஷ்யையாக இருந்த தனக்கு ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா என பெயர் வைத்ததுடன் என்னை திருவனந்தபுரத்தில் உள்ள குருகுலத்திற்கு ஆசிரியராக அனுப்பினார்.
சக்தி வாய்ந்த நித்தியானந்தா வாக்கு எனக்கு மிகப்பெரிதாக அன்று இருந்தது ஆனால் அவரிடம் துளியும் சக்தி மட்டும் இன்றி மனிதாபிமானமும் இல்லை என்பதை குருகுலம் சென்ற பின் அறிந்துகொண்டேன். குருகுலத்தில் எனக்கு கொடுக்கப் பட்ட வேலை மாணவர்களுக்கு பேஸ்புக், டுவிட்டர், கணக்குகள் ஆரம்பிப்பது அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொடுப்பதாகும்.
இணையத்தின் வழியாக தான் நித்தியானந்தா மூளை சலவை செய்வார் அதனையே மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்.அங்குள்ள சிறுவ சிறுமிகளுடன் பேச ஆரம்பித்த போது அவர்கள் சொன்ன விடயங்கள் என் நிலை உணர வைத்தது. தனித்தனியாக சிறுவர், சிறுமிகள் தங்க வைக்கப் பட்டுள்ள நிலையில்
4மணிக்கு அவர்களை எழுப்பி விடுவார்களாம்.
எழும்பாதவர்களை அடித்து துன்புறுத்துவார்களாம். யாருடனும் பேசவே கூடாதாம், அத்துடன் அவர்கள் கொடுக்கும் நேரம் தவிர்த்து வேற எந்த நேரத்திலும் இயற்கை உபாதைகளை கழிக்க செல்ல முடியாதாம். இயற்கை உபாதைகளை அடக்குவதால் சிறுவர்கள் சிலர் மயங்கி விழுந்துள்ளார்களாம். இதனை கண்டுகொள்வதில்லையாம்.
இப்படி சிறுவர்கள் என்னிடம் கூறி அழுதனர். உணவு கூட சரியான முறையில் கிடைக்காமல் குழந்தைகள் கண்ணீருடன் வாழ்வதாகவும் இது பற்றி நடிகை ரஞ்சிதாவிடம் கூறிய போதும் அவர்கள் கண்டுகொள்ளாத நிலையில் தான் குருகுலத்தை விட்டு வெளியேற முடிவு எடுத்து வெளியே வந்து மக்களுக்கு தெரிவித்து விட்டதாகவும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ..!