டிக்கெட் To பினாலே வெற்றியாளரை ஏற்கனவே தேர்வு செய்த தொலைகாட்சி.? நேரடியாக பைனல் செல்வது யார்.? இதோ விபரம்.!!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில வாரங்களில் வெற்றியாளர் யார் என்று தெரிந்து விடும். ஜனவரி 19ம் திகதி பைனல் நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. பைனலுக்கு 4 போட்டியாளர்கள் செல்வார்கள், வீட்டில் இருக்கும் நான்கு பேர் கட்டாயம் வெளியேற்றப் பட வேண்டும்.
17 பேர் இருந்த பிக் பாஸ் வீட்டில் தற்போது 8 பேர் இருக்கின்றனர். பாலாஜி, ரியோ, சோம், ஆரி, ஆஜித், ஷிவானி, ரம்யா, கேப்ரியலா ஆகியோர் இருக்கின்றனர். இதில் ஒருவர் 5 லட்சம் அல்லது அதற்கு அதிகமான பணத்துடன் வெளியேறுவார். இந்த வாரம் ஒருவர் அல்லது இருவர் வெளியேற்றப் படலாம்.
பைனலுக்கு ரியோ, பாலாஜி, ஆரி, கேப்ரியலா அல்லது ரம்யா போகலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்த நிலையில் நேரடியாக பைனல் செல்லும் டிக்கட் வெற்றி பெறும் டாஸ்க் அதாவது டிக்கட் TO பினாலே டாஸ்க் அடுத்த வாரம் இடம்பெற உள்ளது. இந்த சீசனில் இந்த டாஸ்க் தான் கடினமாக இருக்கும் என்று நம்பப் படுகிறது.
இது இப்படி இருக்கையில் டிக்கெட் To பினாலே வெற்றியாளரை தொலைகாட்சி தேர்வு செய்து விட்டதாக தகவல் கசிந்துள்ளது. அதனை படி ரியோ தான் வெற்றிபெற்றுள்ளார் என்று சிலரும், பலாஜி வெற்றிபெற்றதாக சிலரும் கூறி வருகின்றனர். உண்மையை என்ன என்பது அடுத்த வாரம் பார்க்கலாம்.!