சித்ராவின் மரண விசாரணையில் கைமாறிய பணம்.!! சித்துவின் தாயார் பரபரப்பு மனு..!!
சித்ராவின் மரண விசாரணையில் பணப் பெட்டி மாறிவிட்டதாக அவரது தாயார் தமிழக முதலமைச்சரிடம் மனு ஒன்றை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜே சித்ரா ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சி முடிவடைந்து 2.30 மணியளவில் தங்கிருந்த ஹோட்டலுக்கு சென்றார்.
காலை 5 மணியளவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவரின் தந்தை சித்ராவின் தாயாருக்கு கால் செய்து கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சித்து தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உறவினர்கள், ரசிகர்களும் தற்கொலை தான் செய்துகொண்டார் என கணவர் குடும்பத்தினரும் தெரிவித்தனர்.
மருத்துவ அறிக்கையில் தற்கொலை என்று வந்ததை தொடர்ந்து பொலீஸாரும் தற்கொலை என வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக சித்துவின் கணவர் ஹேமந்தை கைது செய்தனர். ஆனால் சித்துவின் மரணம் கொலை தான், தற்கொலை இல்லை என சித்துவின் தாயார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் ஆர்டிஓ விசாரணை நிறைவுக்கு வந்தது.
250 பக்க அறிக்கையை ஆர்டிஓ கையளித்தது. இதனை தொடர்ந்து சித்துவின் தாயார் ஆர்டிஓ பணம் வாங்கிக் கொண்டு விசாரணையை நிறைவு செய்துவிட்டது. முழுவதும் மட்டுமே பேசியுள்ளது என தெரிவித்ததுடன் சித்துவின் மரண வழக்கை CBCID விசாரணை செய்ய வேண்டும் என்றும், அதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் எனவும் மனு கொடுத்துள்ளார்.!!