இன்றைய ராசி பலன் 02.06..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.02-06-2019, வைகாசி 19, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 04.40 வரை பின்பு அமாவாசை. கிருத்திகை நட்சத்திரம் இரவு 12.38 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. போதாயண அமாவாசை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷராசி நேயர்களே:தாய் வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பாதிப்பு இருக்காது.இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.
ரிஷபராசி அன்பர்களே:பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரித்தாலும், சலித்துக்கொள்ளாமல் செய்வீர்கள்.
மிதுனராசி காரர்களே: உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையக்கூடும்.கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகள் உற்சாகம் தரும்.
கடகராசி நேயர்களே:பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள்.வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.
சிம்மராசி அன்பர்களே:பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு நீங்கும்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும்.
கன்னி ராசி காரர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய எண்ணங்கள் தோன்றும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
துலாராசி உறவுகளே:சந்திராஷ்டமம் தொடங்குவதால் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலையவேண்டி இருக்கும். அதன் காரணமாக உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்துக்கொள்வார்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள்.சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகராசி நேயர்களே: தந்தைவழியில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள்.
தனுசுராசி அன்பர்களே:குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். குடும்பம் தொடர்பான முடிவுகள் எதுவும் இன்று எடுக்கவேண்டாம்.வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.
மகரராசி காரர்களே:மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பொறுமை அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.
கும்பராசி உறவுகளே:கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
மீனராசி நேயர்களே:தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.