இன்றைய ராசி பலன் – 03.08.2021
இன்றைய பஞ்சாங்கம், 03-08-2021, ஆடி 18, செவ்வாய்க்கிழமை, தசமி திதி பகல் 01.00 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 01.44 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பின்இரவு 01.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆடி 18-ஆம் பெருக்கு. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியத்திற்காக சிறு சிறு செலவுகள் செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்படுவது நல்லது.
ரிஷப ராசி அன்பர்களே:வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள்.உறவினர்கள் வழியில் சுப செய்தி வந்து சேரும். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
மிதுன ராசி காரர்களே:உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக் கூடும்.பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன்கள் கிட்டும். கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.
கடக ராசி நேயர்களே:விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் சில நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.வாகன வசதிப் பெருகும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள்.ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சிலருக்குத் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் ஏற்படும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
கன்னி ராசி காரர்களே:வீண் செலவுகள் அதிகரிக்கும்.மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.அவசரத்திற்குக் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும்.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபடவேண்டி இருக்கும்.மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர் வருகை உற்சாகம் தரும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.வாழ்க்கைத் துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதல் தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்படுவது நல்லது.
விருச்சிக ராசி நேயர்களே:கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.: உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
தனுசு ராசி அன்பர்களே:பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அரசாங்க விசேஷங்களில் நல்ல செய்தி வரும். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மகர ராசி காரர்களே:அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே: எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும்.
மீன ராசி நேயர்களே:
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.