இன்றைய ராசி பலன் – 04.01.2022
இன்றைய பஞ்சாங்கம்,04-01-2022, மார்கழி 20, செவ்வாய்க்கிழமை, துதியை திதி மாலை 05.19 வரை பின்பு வளர்பிறை திரிதியை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 10.56 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 10.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.கணவன்-மனைவிக்குள் இருந்தமோதல்கள் விலகும். உடல்நலனில் கவனம் தேவை. எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.
மிதுன ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். பணிச் சுமை குறையும்.
கடக ராசி நேயர்களே:பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை.கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே:திருமண தடைகள் விலகும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
கன்னி ராசி காரர்களே:பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள்.பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக் கவும்.வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
துலாராசி உறவுகளே:தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்துபோகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும்.
விருச்சிக ராசி நேயர்களே:குடும்பத் தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மாலை யில் குடும்பத்துடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள்.உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
தனுசு ராசி அன்பர்களே:எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதர வகையில் எதிர் பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும் . பிள் ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மகர ராசி காரர்களே:சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.தாயின் உடல்நலனில் கவனம் தேவை.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும்.குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும்.
கும்ப ராசி உறவுகளே:எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது மிக அவசியம்.உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.
மீன ராசி நேயர்களே:
திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேற்றுமை நீங்கி, அந்நி யோன்யம் அதிகரிக்கும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் பெருமை உண்டா கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.