இன்றைய ராசி பலன் – 04.05.2021
இன்றைய பஞ்சாங்கம், 04-05-2021, சித்திரை 21, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பகல் 01.10 வரை பின்பு தேய்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் காலை 08.26 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அக்னி நட்சத்திரம் ஆரம்பம் பகல் 3.14 மணிக்கு. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.
ரிஷப ராசி அன்பர்களே:எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பணிச்சுமை குறையும்.
மிதுன ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். ஒரு காரியத்தையும் இரண்டு மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.
கடக ராசி நேயர்களே: வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும்.
சிம்ம ராசி அன்பர்களே:பழைய பாக்கிகள் வசூலாகும்.தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும்.பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும்.
கன்னி ராசி காரர்களே:வீட்டில் ஒற்றுமை குறையும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும்.ண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும்.மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.
துலாராசி உறவுகளே:உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும்.வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடைபெறும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே:சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.மாலையில் குடும்பத்தினருடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:வீண் பிரச்சினைகள் தேடி வரும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.
மகர ராசி காரர்களே: உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும்.பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
கும்ப ராசி உறவுகளே:குடும்பத்தில் அமைதி குறையும் சூழ்நிலை உருவாகும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது மிக அவசியம்.உறவினருடன் பகை வரக்கூடும். வாகனத் தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
மீன ராசி நேயர்களே:
உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். காரியங்களில் வெற்றி உண்டாகும்.புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.