இன்றைய ராசி பலன் – 05.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 05-03-2021, மாசி 21, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி இரவு 07.55 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அனுஷம் நட்சத்திரம் இரவு 10.37 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 10.37 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். தாய்வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
ரிஷப ராசி அன்பர்களே:
கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
மிதுன ராசி காரர்களே:
மனைவி வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறன் அதிகரிக்கும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி உங்கள் விருப்பப்படி நடந்துகொள் வார்கள்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து விலகும்.
கடக ராசி நேயர்களே:
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். பசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
கன்னி ராசி காரர்களே:
பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
துலாராசி உறவுகளே:
தாயாருக்கு அசதி சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும்.
விருச்சிக ராசி நேயர்களே:
வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். நெருங்கியவர்களால் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
தனுசு ராசி அன்பர்களே:
குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெற்றோர் பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பணப்புழக்கம் இருந்தாலும் திடீர் செலவுகளால் கையிருப்பு குறையக்கூடும்.உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.
மகர ராசி காரர்களே:
சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
கும்ப ராசி உறவுகளே:
உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்.பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
மீன ராசி நேயர்களே:
எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். உடல்நலனில் கவனம் தேவை.ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும்.சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். கடன்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்