இன்றைய ராசி பலன் – 08.08.2020
இன்றைய பஞ்சாங்கம்,08-08-2020, ஆடி 24, சனிக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.19 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.12 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் மாலை 04.12 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:
உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.எதிர்பாராத உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வேலை யாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
மிதுன ராசி காரர்களே:
சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை வீட்டிலேயே நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.உறவினர்கள் நண் பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.
கடக ராசி நேயர்களே:
உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.
கன்னி ராசி காரர்களே:
எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.வியாபாரத்தில் சில தந்தி ரங்களை கற்று கொள்வீர்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும்.
துலாராசி உறவுகளே:
வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகச் செலவு செய்வீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை நிலவும். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும்.அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லைகுறையும்.
தனுசு ராசி அன்பர்களே:
புது வேலைக்கு முயற்சி பலித மாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.பூர்வீக சொத்துக்களை ரீதியாக அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும்.வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.
மகர ராசி காரர்களே:
எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்ப ராசி உறவுகளே:
கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.புதியவர் கள் நண்பர்களாவார்கள். வியாபா ரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும்.
மீன ராசி நேயர்களே:
புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும்.