இன்றைய ராசி பலன் – 11.02.2021
இன்றைய பஞ்சாங்கம், 11-02-2021, தை 29, வியாழக்கிழமை, அமாவாசை திதி இரவு 12.35 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவோணம் நட்சத்திரம் பகல் 02.05 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ தை அமாவாசை. ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும்.தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.பாதியில் நின்ற வேலைகள் முடியும். பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும்.
மிதுன ராசி காரர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.உற்றார் உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல்நலனில் கவனம் தேவை.வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.
கடக ராசி நேயர்களே:
வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும்.தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும்.நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
சிம்ம ராசி அன்பர்களே:
உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.சகோதரர்களால் பயனடைவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள்.
கன்னி ராசி காரர்களே:
எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
துலாராசி உறவுகளே:
வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உற்றார் உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம்.முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்கவேண்டாம்.தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள்.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். எதிரிகள் பணிந்து போவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். காரியங்க ளில் சிறுசிறு தடைகள் உண்டாகும்.அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறை யும்.
தனுசு ராசி அன்பர்களே:
பழைய பிரச்சினைகள் தீரும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும்.பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும்.
மகர ராசி காரர்களே:
யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும்.சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:
உடல் அசதி, சோர்வு வந்து விலகும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது மிக அவசியம்.பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். வாகனத் தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மீன ராசி நேயர்களே:
சுப செய்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.காரியங்களில் வெற்றி உண்டாகும்.ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.