இன்றைய ராசி பலன் – 12.04.2021
இன்றைய பஞ்சாங்கம், 12-04-2021, பங்குனி 30, திங்கட்கிழமை, அமாவாசை திதி காலை 08.01 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரேவதி நட்சத்திரம் பகல் 11.30 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும்.உடல் அசதி சோர்வு வந்து விலகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.சிலருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.
மிதுன ராசி காரர்களே:சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.
தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:வேலைபளு குறையும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.குடும்பப் பொறுப்பு களை முடிப்பதில் சற்று அலைச்சல் ஏற்படும்.உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.
சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு பகல் 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் மீது வீணான குறைக்கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது. பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.பிற் பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.
கன்னி ராசி காரர்களே:ராசிக்கு பகல் 11.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.எதிர்பாராத வகையில் வீண் பிரச்சினைகள் தேடி வரும்.எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.
துலாராசி உறவுகளே: இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.சுப நிகழ்ச்சிகளில்கலந்து கொள்வீர்கள். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும்.
விருச்சிக ராசி நேயர்களே:உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை நிலவும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.மகளுக்கு நல்லவரன் அமையும். பிள்ளைகளால் வீண் பிரச் னைகள் ஏற்படக்கூடும். தாயாரின் உடலில் கவனம் தேவை.
மகர ராசி காரர்களே:அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற் படக்கூடும்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.
கும்ப ராசி உறவுகளே:சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். பிள்ளை களின் பிடிவாதப் போக்கு மாறும்.விலகிச் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சிலருக்கு இளைய சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர்.
மீன ராசி நேயர்களே:
குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும்.உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.