இன்றைய ராசி பலன் – 12.05.2021
இன்றைய பஞ்சாங்கம்,12-05-2021, சித்திரை 29, புதன்கிழமை, பிரதமை திதி பின்இரவு 03.06 வரை பின்பு வளர்பிறை துதியை. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 02.40 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பின்இரவு 02.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:அழகும் இளமையும் கூடும்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும்.பிள்ளைகளால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
ரிஷப ராசி அன்பர்களே:நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும்.
மிதுன ராசி காரர்களே:உறவினர் நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள்.
கடக ராசி நேயர்களே:பயணங்கள் சிறப்பாக அமையும். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். காரியங்கள் அனுகூலமாக முடியும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:மனம்விட்டுப் பேசுகிறீர்கள்.உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உத்தியோகத்தில் சகஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.
கன்னி ராசி காரர்களே:இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும்.முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும்.புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். மாலையில் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது ஆறுதல் தரும்.
துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.நன்றி மறந்த ஒருவரை நினைத்துவருத்தப்படுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம்.மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
விருச்சிக ராசி நேயர்களே:மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக் கும்.
தனுசு ராசி அன்பர்களே:குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலருக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும்.
மகர ராசி காரர்களே:பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். அவசியத் தேவை இருந்தால் மட்டுமே தக்க முன்னேற்பாடுகளுடன் வெளியில் செல்லவும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
கும்ப ராசி உறவுகளே:சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உணவு விஷயத்தில் கவனம் தேவை.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.
மீன ராசி நேயர்களே:
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி எளிதில் கிட்டும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.