இன்றைய ராசி பலன் – 13.02.2021
இன்றைய பஞ்சாங்கம், 13-02-2021, மாசி 01, சனிக்கிழமை, துதியை திதி இரவு 12.57 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சதயம் நட்சத்திரம் பகல் 03.11 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 03.11 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம்.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தவும்.
ரிஷப ராசி அன்பர்களே:
உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் வகையில் திடீர் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி காரர்களே:
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாழ்க்கைத்துணைவழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
கடக ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.குடும்பத்தில் சிறுவார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன நிம்மதி குறையும்.
சிம்ம ராசி அன்பர்களே:
. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக செயல்படுவார்கள். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
கன்னி ராசி காரர்களே:
சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
துலாராசி உறவுகளே:
குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும்.உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்பு களைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.எதிலும் கவனம் தேவை. விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
தனுசு ராசி அன்பர்களே:
பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
மகர ராசி காரர்களே:
வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க் கவும். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பொறுமையாக இருப்பது அவசியம்.நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.
கும்ப ராசி உறவுகளே:
நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.தாய்வழி உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருவதாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும்.சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும்.
மீன ராசி நேயர்களே:
வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம்.செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்கு சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும்.பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். இளைய சகோ தரரால் சங்கடங்கள் ஏற்படும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.