இன்றைய ராசி பலன் – 14.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 14-03-2021, பங்குனி 01, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி மாலை 05.06 வரை பின்பு வளர்பிறை துதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.19 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். காருடையான் நோன்பு. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:
பிள்ளைகளிடம் கனிவாகபேசுங்கள். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும்.உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம்.
ரிஷப ராசி அன்பர்களே:
விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகலாம்.கணவன் – மனைவிக்கிடையே வாக்கு வாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சிலமுடிவுகள் எடுப்பீர்கள்.
மிதுன ராசி காரர்களே:
பெண்களுக்கு பணிசுமை குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும்.உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
கடக ராசி நேயர்களே:
உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.நன்றிமறந்த சிலரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும்.
கன்னி ராசி காரர்களே:
மனைவி வழியில் நல்ல செய்தி வரும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும்.சகோதர வகையில் உதவிகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
துலாராசி உறவுகளே:
பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.அதிகார பதவியில் இருப்பவர்களின்நட்பு கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு பணிசுமை குறையும்.காரமான உணவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்
விருச்சிக ராசி நேயர்களே:
குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்றுநிறைவேறும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள்.பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.
தனுசு ராசி அன்பர்களே:
தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.சகோ தரர்களை அனுசரித்துச் செல்லவும்.பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.புது தொழில் தொடங்குவீர்கள்.
மகர ராசி காரர்களே:
சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.வீட்டில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கும்ப ராசி உறவுகளே:
அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.
மீன ராசி நேயர்களே:
நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பயணங்களை தவிர்ப்பது நல்லது.வாழ்க்கைத் துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். உறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் தள்ளிப் போகும்.