இன்றைய ராசி பலன் – 16.01.2022
இன்றைய பஞ்சாங்கம்,16-01-2022, தை 03, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.18 வரை பின்பு பௌர்ணமி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 02.09 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. காணும் பொங்கல். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷ ராசி நேயர்களே:சகோதரர்கள் குடும்ப விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள்.உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும்.மனதில் ஏற்பட்டிருந்த குழப் பங்கள் நீங்கும்.வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.ள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகலாம்.
மிதுன ராசி காரர்களே:பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த மனவருத்தங்கள் நீங்கும்.உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
கடக ராசி நேயர்களே:உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.உறவினர் நண்பர் களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் உண்டாகும்.உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள்.வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.
சிம்ம ராசி அன்பர்களே:தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும்.உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் அந்நியர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம்.இல்லத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.ஆன்மிகப் பெரியோரின்ஆசி கிட்டும்.
கன்னி ராசி காரர்களே:பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும்.உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு.நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
துலாராசி உறவுகளே:அவசரத்திற்கு வாழ்ந்திருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும்.தெய்வ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.பணவரவு அமோகமாக இருக்கும். தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே: ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப்போவது நல்லது.வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.குடும்பத்தில் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.மன இறுக்கம் வந்து நீங்கும்.உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும்.
தனுசு ராசி அன்பர்களே:கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். பிள்ளைகளின் பணிகளில் அவர்களுக்கு உதவி செய்வீர்கள்.உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.
மகர ராசி காரர்களே:அரசாங்கவிஷயங்கள் நல்ல விதத்தில் முடியும்.எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கும்ப ராசி உறவுகளே:தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும்.வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். உடல் நலனில் கவனம் தேவை.பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகமாகும்.அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
மீன ராசி நேயர்களே:
வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.