இன்றைய ராசி பலன் – 17.01.2022
இன்றைய பஞ்சாங்கம், 17-01-2022, தை 04, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 05.18 வரை பின்பு தேய்பிறை பிரதமை. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 04.37 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பின்இரவு 04.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:விருந்தினர் வருகை அதிகரிக்கும்.மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும்.பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.உடல்நிலை சீராகும்.
ரிஷப ராசி அன்பர்களே: எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடுவது நல்லது.
மிதுன ராசி காரர்களே:பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
கடக ராசி நேயர்களே:வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.சகோதரர்களால் காரியங் களில் அனுகூலம் உண்டாகும்.யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே:திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார்.சுபகாரிய முயற்சிகளிள் இருந்த தடை விலகும். அவர்மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கும்.குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பார்கள்.தெய்வ வழிபாடு நல்லது.
கன்னி ராசி காரர்களே:காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.உறவினர்கள் மூலம் கிடைக்கும் செய்தி அளவற்ற மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். குடும்பத் தேவைகளை நிறை வேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள்.
துலாராசி உறவுகளே:காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை. நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள்.உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும்.
தனுசு ராசி அன்பர்களே:மனைவி உறவினர்கள் மதிப்பார்கள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும்.திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.மனைவி உறவினர்கள் மதிப்பார்கள்.
மகர ராசி காரர்களே:எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.எதிர்பாராத பணவரவு உண்டு.சகோதரர்களால் சில சங்கடங்கள் உண்டாகும்.
கும்ப ராசி உறவுகளே:உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். டும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம்.
மீன ராசி நேயர்களே:
எதிர்பாராத பண லாபம் உண்டாகும்.தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் ஏற்படும்.தடைகளை கண்டு தளரமாட்டீர்கள்.