இன்றைய ராசி பலன் – 17.04.2021
இன்றைய பஞ்சாங்கம்,17-04-2021, சித்திரை 04, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.33 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 02.33 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.நல்ல வாய்ப்புகளை யெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடுவது நல்லது.
மிதுன ராசி காரர்களே:வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது.
கடக ராசி நேயர்களே:திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். சகோதரர்களால் காரியங் களில் அனுகூலம் உண்டாகும்.குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:ணவரவு அமோகமாக இருக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பார்கள்.வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
கன்னி ராசி காரர்களே:அளவற்ற மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் தோன்றலாம். குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் மதிப்புகூடும்.
துலாராசி உறவுகளே:ராசிக்கு பகல் 1.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:ராசிக்கு பகல் 1.10 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:சுபசெய்திகள் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள் பழைய சிக்கலில் ஒன்று தீரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நி யோன்யம் அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும்.
மகர ராசி காரர்களே:உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சிலருக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புதிய முயற்சிகள் இழுபறியாகி முடியும்.
கும்ப ராசி உறவுகளே:திருமண சுபமுயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும்.கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.
மீன ராசி நேயர்களே:
உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவும். உத்தியோகத்தில் மனம் மகிழும் மாற்றங்கள் உண்டாகும்.