இன்றைய ராசி பலன் 19.05..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.19-05-2019, வைகாசி 05, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 01.43 வரை பின்பு தேய்பிறை துதியை. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 02.07 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷராசி நேயர்களே:சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவை.மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்படக்கூடும்.சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
ரிஷபராசி அன்பர்களே:உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.
மிதுனராசி காரர்களே:இனிய செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
கடகராசி நேயர்களே:உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள்.நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மராசி அன்பர்களே:விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
கன்னி ராசி காரர்களே:சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாராசி உறவுகளே:கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
விருச்சிகராசி நேயர்களே:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கடன்கள் விஷயத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசுராசி அன்பர்களே:மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும்.வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மகரராசி காரர்களே:பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.யணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
கும்பராசி உறவுகளே:தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.
மீனராசி நேயர்களே: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம்.தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்.