இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!
நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.இன்றைய பஞ்சாங்கம்
19-11-2018, கார்த்திகை 03, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.30 வரை பின்பு வளர்பிறை துவாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 05.54 வரை பின்பு ரேவதி. நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக பணியாளர்களின் உதவியுடன் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்பட்டாலும், செலவுகளும் அதிகரிக்கும்.
ரிஷபம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிறப்பான நாள்.
மிதுனம் : மனதில் உற்சாகமும் கலையுணர்வும் அதிகரிக்கும். எவரிடமும் நல் அன்பு பாராட்டு வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி திருப்திகரமாக நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு பெறுவுர். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.
கடகம்:உங்களுக்கு குடும்பத்தினரால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறப்புகளிடம் ஒற்றுமை குறையும். வீண் விரயங்களால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.
சிம்மம்: இன்று புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், ஒருவழியாக சமாளித்துவிடுவீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், பெரிது படுத்தாமல் பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
கன்னி: கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோ கத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திறமைகள் வெளிப்படும் நாள்.
துலாம்: மிகுந்த பொறுமை குணத்துடன் செயல்படுவீர்கள். தொல்லை கொடுத்தவர் இடம் விலகிப் போவர். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்:நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
மகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. மனதிற்கு இதமான செய்தி கள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
கும்பம் :சிலர் சுயநலத்துடன் பேசி பழகுவர். விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் வருகின்ற குளறுபடியை மாற்று உபாயத்தினால் சரி செய்வீர்கள். குடும்பத் தேவைகளை சிக்கனச் செலவில் நிறைவேற்றுவீர்கள். மருத்துவ சிகிச்சை தேவைப் படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மீனம்:உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டின் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.