இன்றைய ராசி பலன் – 22.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 22-03-2021, பங்குனி 09, திங்கட்கிழமை, அஷ்டமி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.27 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் இரவு 09.27 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:
சொத்து வாங்குவது, விற்பது குறித்து யோசிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:
பழைய சிக்கலில் ஒன்று தீரும்.குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மிதுன ராசி காரர்களே:
யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும்.உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும்.
கடக ராசி நேயர்களே:
வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும்.வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
விருந்தினர் வருகை அதிகரிக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.
கன்னி ராசி காரர்களே:
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். உங்களிடம் பழகும் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.
துலாராசி உறவுகளே:
குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
விருச்சிக ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும்.சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.தலைச்சுற்றலும் முழங்கால் வலிவந்து விலகும். உறவினர்கள் மூலம் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்து செல்லும்.
தனுசு ராசி அன்பர்களே:
மறைமுக எதிர்ப்புகள் விலகும்.குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
மகர ராசி காரர்களே:
குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும்.வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.
கும்ப ராசி உறவுகளே:
நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும்.சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சில சில தடைகள் ஏற்பட்டு நீங்கும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.
மீன ராசி நேயர்களே:
உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும்.பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டாகும்.