இன்றைய ராசி பலன் – 23.10.2020
இன்றைய பஞ்சாங்கம், 23-10-2020, ஐப்பசி 07, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி காலை 06.57 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 01.28 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின்இரவு 01.28 வரை பின்பு மரண யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. துர்காஷ்டமி. கால பைரவர் வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:பயணங்களால் ஆதாயமடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும்.
ரிஷப ராசி அன்பர்களே: வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.உடல் ஆரோக்கியம் சற்று குறையும். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
மிதுன ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டு.யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் சிறு சிறு பிரச்னைகளை சமாளிக்கவேண்டி வரும்.
கடக ராசி நேயர்களே:எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.பழைய கடனைத் திருப்பித் தரும் வாய்ப்பு ஏற்படும், கொடுத்த கடனும் திரும்பக் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும்.யாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள்.
கன்னி ராசி காரர்களே:.வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம்.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.
துலாராசி உறவுகளே:பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது உங்களை உற்சாகப்படுத்தும். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.
விருச்சிக ராசி நேயர்களே: உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். பயணங்களால் வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும்.விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும். நண் பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக் கறை காட்டுவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம்.
மகர ராசி காரர்களே:சிலருக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கும்ப ராசி உறவுகளே:நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மீன ராசி நேயர்களே:
சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.